Nov 4, 2009

பி&பி 10


 

  ஸ்ரீமதி முதல்ல. அடுத்து பரிசல். இரண்டு இஷ்ட தெய்வங்கள், ஓ தெய்வம்ன்னா காடா? இரண்டு இம்சைகள் கூப்பிட்டும் எழுதலைன்னா எப்படிங்க? இதோ இன்னொரு சுயபுராணம். ப.பு இதுக்கும் வந்து சுயபுராணம் ஓவரு கமெண்ட் போடாதப்பா. எல்லோரும் செய்றதுதானே நானும் செய்றேன். ரைட்டு. ஓவர் டூ பதிவு.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

*****************************************

இனி பி.& பி:

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஹிஹிஹி.கொஞ்ச நாள் ஆகுமே.

பிடிக்காதவர்: சஞ்சய் காந்தி

2.எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா

பிடிக்காதவர்:சாரு நிவேதா

3.கவிஞர்
பிடித்தவர் :நா.முத்துக்குமார்

பிடிக்காதவர்:சினேகன்

4.இயக்குனர்
பிடித்தவர் :பாலா

பிடிக்காதவர்:சரண்

5.நடிகர்
பிடித்தவர் :விஜய் 

பிடிக்காதவர்:அதே லிஸ்ட்டுதான்

6.நடிகை
பிடித்தவர் : இப்போதைக்கு சுனைனா  

பிடிக்காதவர்:சமீரா ரெட்டி

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா

பிடிக்காதவர்:பரத்வாஜ்

8. தொழிலதிபர்
பிடித்தவர் :ஹிஹிஹி.. அவர்தான் 

பிடிக்காதவர்: சன் டிவி காரங்க

9.  ஊர்க்காரங்க
பிடித்தவர் :சென்னைக்காரங்க

பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க

10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : குடும்பம் காயத்ரி 

பிடிக்காதவர்: ராதிகா  ஆவ்வ்வ்

இதைத் தொடர நான் அழைப்பது:
1. ராஜன்
2. கடைக்குட்டி
3. பப்பு
4. ட்ரூத்
5. புன்னகை

54 கருத்துக்குத்து:

சின்ன அம்மிணி on November 4, 2009 8:52 AM said...

//ஹிஹிஹி.. அவர்தான் //

கிங் பிஷர்காரர் தானே.

சின்ன அம்மிணி on November 4, 2009 8:53 AM said...

//பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க/

தாமிரான்னே சொல்லியிருக்கலாம் :)

பரிசல்காரன் on November 4, 2009 9:35 AM said...

அந்தப் பிரபலம் இப்ப உயிரோட இருக்கணும்னு சொல்லியிருந்தேனே.. நானும் சுஜாதாதான் எழுதியிருந்தேன்.. அந்த விதிக்காக மாத்தினேன்..

btw, ஒனக்குப் பிடிக்காதுன்னு பேரையெல்லாம் மாத்தப்படாது. நிவேதா அல்ல நிவேதிதா...

பீர் | Peer on November 4, 2009 9:36 AM said...

//ஹிஹிஹி// இப்டியெல்லாமா பேர் வைக்கிறாங்க..

தத்துபித்து on November 4, 2009 10:30 AM said...

//பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க/

ethenum karanam irukka karki?

கார்க்கி on November 4, 2009 10:47 AM said...

அம்மிணி, சென்னையில் ஒரு வளரும் தொழிலதிபர் உருவாவது தெரியாதா? செகண்ட் ..கிகிகிகி

பரிசல், மன்னிச்சுக்குப்பா.. சாப்புட்டிக்கிட்டே டைப் பண்ணன்னா.. மறந்துட்டேன். நிவேதா. ரொம்ப முக்கியம்.

பீர் அண்ணே, சில பேரு விஸ்கி, பிராந்தின்னு வைக்கிறாங்க :))))

தத்துபித்து, தேவையில்லாம டென்ஷன் ஆவாங்க. உதாவத விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆனா ஊன்னா நம்ம ஊரு பயலு அப்படினு சொல்லுவாங்க. மதுரையும் அப்படித்தான். ஆனா ரேங்கிங்கில் அவிங்க செகண்ட்.

ஸ்ரீமதி on November 4, 2009 10:53 AM said...

ஓய் நான் எப்போ மேன் உன்ன இந்த வெளாட்டுக்கு கூப்ட்டேன்?? இதுலருந்தே தெரியுது நீ பதிவே படிக்கறதில்லன்னு... :)))

ஸ்ரீமதி on November 4, 2009 10:54 AM said...
This post has been removed by the author.
ராஜன் on November 4, 2009 11:08 AM said...

//இதைத் தொடர நான் அழைப்பது:
1. ராஜன் //
ராஜன் எத்தனை ராஜனடி...

பட்டிக்காட்டான்.. on November 4, 2009 11:13 AM said...

//.. ஆனா ஊன்னா நம்ம ஊரு பயலு அப்படினு சொல்லுவாங்க ..//

இப்போ தான் அங்க படிச்சுட்டு வந்தேன், இங்க வந்து பாத்தா இப்படி..!!

இரும்புத்திரை அரவிந்த் on November 4, 2009 11:28 AM said...

//9. ஊர்க்காரங்க
பிடித்தவர் :சென்னைக்காரங்க

பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க
//

ஊர் பாசமும்,ஜாதி பாசமும் ஒன்னு தான் சொன்ன கார்க்கி இவரு..

ஊரு பாசம் எல்லாம் காட்டக்கூடாது சொன்னீங்களே இதுல எப்படி ஊரு வந்தது

இப்படி ஊரு விட்டு ஊரு வந்த பொறந்ததுல இருந்து திருநெல்வேலிகாரனா கடந்த பதிமூணு வருசமா சென்னைகாரனா கடந்த நாலு வருசமா மும்பைகாரனா இருக்கிற ஒருத்தன்

யோ வாய்ஸ் (யோகா) on November 4, 2009 11:49 AM said...

பல விஷயத்தில எனது பிடித்தமானங்களும் இவையே சகா

நர்சிம் on November 4, 2009 12:10 PM said...

ரைட்டு சகா.அப்ப நாந்தானா..

சுசி on November 4, 2009 12:18 PM said...

//பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். //

அப்டீன்னா ????

//பிடித்தவர் :ஹிஹிஹி.. அவர்தான் //

ஓ.. இதுதானா அது !!!

தேங்க்ஸ் கார்க்கி.

பிரியமுடன்...வசந்த் on November 4, 2009 12:34 PM said...

//பிடித்தவர் : ஹிஹிஹி.கொஞ்ச நாள் ஆகுமே.//

ஹ ஹ ஹா

தலைவர் பேர் சொல்றதுக்கென்ன வெட்கம் சகா..

ஹுஸைனம்மா on November 4, 2009 12:35 PM said...

//பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க//

//உதாவத விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆனா ஊன்னா நம்ம ஊரு பயலு அப்படினு சொல்லுவாங்க//

இது அந்த தனிப்பட்ட மனிதரின் குணமாக இருக்கலாமே தவிர, ஊரின் குணமல்ல.

உங்களுக்கு சென்னைப்பாசம் இருப்பதுபோல அவருக்கும் ஊர்ப்பாசம் இருக்கலாமல்லவா?

கார்க்கி on November 4, 2009 12:58 PM said...

ஸ்ரீமதி,அப்போ இத்தனை நாள் உன் கவிதைலாம் படிச்சுதான் கமெண்டு போடரேன்னு நினைச்சியா? அப்பாவியா இருக்கியேம்மா!!

@ராஜன், இது வேறயா சகா? அப்போ எல்லா ராஜனும் எழுதலாமே!!

பட்டிக்காட்டான், எங்க சகா?

அரவிந்த், நான் சென்னைக்காரனே கிடையாது. மொத்தமே நாலு வருஷம்தான் சென்னைல இருந்திருப்பேன். எனக்கு சென்னைவாசிகளை புடிக்கும்ன்னு தான் சொன்னேன். ஆனான் நான் சென்னை கிடையாது.

யோகா, நம்ம அப்படித்தான் சகா

நர்சிம், ஹிஹிஹி,,

எதுக்கு டேங்க்ஸ் சுசி?

வசந்த், வெட்கமா? இன்னும் வரலைன்னு சொல்றேன் சகா

ஹுசைனம்மா, எனக்கு எந்த பாசமும் இல்லை. என் கொள்கை, எந்த ஊருல குப்பை கொட்டற்மோ அதான் புடிக்கும். சென்னை வந்தும் நெல்லைதன வெயிட்டுன்னு எப்படி சொல்லலாம்? அப்ப நெல்லைல குப்பை கொட்டலாமே? இப்ப நான் சென்னையில் இருப்பதால் இந்த பதில்

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் on November 4, 2009 1:35 PM said...

//பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க//
உங்களுக்குப் பிடிக்கலைனு சொன்னது ஒன்னும் தப்பில்ல... சென்னையுடன் ஒப்பிட்டதுதான் கொஞ்சம் நெருடுகிறது. இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சென்னை மக்களின் பழக்க வழக்கம் சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை. இரு ஊர்ப்பக்கமும் வாழ்ந்தவன் என்பதால் சொல்கிறேன்.

//தத்துபித்து, தேவையில்லாம டென்ஷன் ஆவாங்க. உதாவத விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆனா ஊன்னா நம்ம ஊரு பயலு அப்படினு சொல்லுவாங்க. மதுரையும் அப்படித்தா//
//சென்னை வந்தும் நெல்லைதன வெயிட்டுன்னு எப்படி சொல்லலாம்? அப்ப நெல்லைல குப்பை கொட்டலாமே? இப்ப நான் சென்னையில் இருப்பதால் இந்த பதில்//
இதில்தான் உங்கள் பார்வை கொஞ்சம் தெரிகிறது. பதிலை மாற்றிக்கொள்ளுங்கள்...
பிடிக்காதவர்: சென்னை வந்து வாழும் திருநெல்வேலிகாரங்க..

ராஜன் on November 4, 2009 1:56 PM said...

//கார்க்கி
@ராஜன், இது வேறயா சகா? அப்போ எல்லா ராஜனும் எழுதலாமே!!//

நன்றி கார்க்கி...

விக்னேஷ்வரி on November 4, 2009 2:04 PM said...

ரைட்டு.

ஆதிமூலகிருஷ்ணன் on November 4, 2009 2:27 PM said...

ரைட்டு சகா.அப்ப நாந்தானா..


(நினைச்சது மாதிரி ஏதோ விவாதம் போவுது போல தெரியுது. கொஞ்சம் ஜாக்கிரதை.. ஏன்னா பதிவர்களில் மெஜாரிட்டி திருநெல்வேலியாதான் இருப்பார்கள், மண்டையில் கொட்டி விட்டிருவாங்க..)

தீப்பெட்டி on November 4, 2009 2:30 PM said...

//பிடித்தவர் :சென்னைக்காரங்க

பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க//

என்ன ஒரு வில்லத்தனம்..

மண்குதிரை on November 4, 2009 2:35 PM said...

ஊர்க்காரங்க
பிடித்தவர் :சென்னைக்காரங்க பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க

een nanba?

சஹானா beautiful raga on November 4, 2009 3:03 PM said...

ரைட்டு ஏன் ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????

ஜெனோவா on November 4, 2009 3:08 PM said...

சகா , ரைட்டு .. எங்கயோ புரிதலில் இடைவெளி இருக்கலாம்...
மத்தபடி புடிக்கிறதும் , புடிக்காததும் அவரர் விருப்பம் ....

வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா on November 4, 2009 3:14 PM said...

//சென்னை வந்தும் நெல்லைதன வெயிட்டுன்னு எப்படி சொல்லலாம்? //

இதில் எனக்கும் உடன்பாடுதான் கார்க்கி. இங்கே அபுதாபியிலும் இவ்வாறு புலம்பும் பிரகஸ்பதிகள் உண்டு. ஆனால், திருநெல்வேலிக்காரர்களை மட்டும் ஏன்?

நெல்லைப் பதிவர்களே, திரண்டு வாரீர்!!

(மாதவ்ராஜ் அண்ணே, இந்த தொடர் ஆரம்பிச்ச நோக்கம் நிறைவேத்தற முதல் விவாதம்??)

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் on November 4, 2009 3:21 PM said...

//தத்துபித்து, தேவையில்லாம டென்ஷன் ஆவாங்க. உதாவத விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆனா ஊன்னா நம்ம ஊரு பயலு அப்படினு சொல்லுவாங்க.//

//ஆதிமூலகிருஷ்ணன் said...
(நினைச்சது மாதிரி ஏதோ விவாதம் போவுது போல தெரியுது. கொஞ்சம் ஜாக்கிரதை.. ஏன்னா பதிவர்களில் மெஜாரிட்டி திருநெல்வேலியாதான் இருப்பார்கள், மண்டையில் கொட்டி விட்டிருவாங்க..)//

ஆதி அண்ணே,
ஹி ஹி ஹி...

கார்க்கி on November 4, 2009 3:38 PM said...

@எவனோ ஒருவன்,
சென்னையுடன் நான் ஒப்பிடலையே சகா? எனக்கு சென்னை புடிக்கும்ன்னு மட்டும்தான் சொல்லியிருக்கேன்

வாங்க விக்கி

ஆ.மூ.கி. நீங்களும். இன்னும் நிரய நண்பர்கள் இருக்காங்க. உங்களை சந்திக்கும் முன்பே எனக்கு இந்த மாதிரி தான் தோணுச்சு சகா :))


தீப்பெட்டி, நான் ஹீரோங்க :))

மண்குதிரை, சும்மாதாங்க..

பிசாசு, நீங்களும் நெல்லையா?

ஜெனோவா, நன்றி. ஆனா யோசிச்சு பாருங்க, நான் நெல்லையை புடிக்கலைன்னு சொல்வதையே நெல்லைக்காரர்களால் ஏத்துக்க முடியல. நம்ம சகான்னுதான் விடறீங்கலே தவிர ஒருவன் புடிக்கலைன்னு சொல்வதை ஏத்துக்க முடியல. என் ஊரை ஒருவன் புடிகக்லைன்னு சொன்னா, எனக்கும்தான்னு நான் சொல்லுவேன். உடனே நெல்லை நல்ல ஊருன்னு சொல்லாதிங்க. :)))


ஹுசைனம்மா, மதுரையையும் சொல்லியிருக்கேன். ஆனா முதலிடத்தில் நெல்லை. ஊரு விட்டு வெளிய மக்கள் போனாலே, அது அவஙக்ள பொறுத்த வரைக்கும் வாழ தகுதியற்ற ஊரா போயிடுது. ஒப்பீட்டளவில் நல்ல வாய்ப்பு வெளிய கிடைப்பதால் போறேன்னு சொல்லும் மக்கள், அப்போ ஊருக்கு சப்போர்ட் பண்ணி பேசுவதில் என்ன நியாயய்ம் இருக்க முடியும்?

rajan on November 4, 2009 4:06 PM said...

சுட்டிக்கு நன்றி கார்கி. பதிவு போட்டாச்சு!

//ராஜன் said...

இதைத் தொடர நான் அழைப்பது:
1. ராஜன் //
ராஜன் எத்தனை ராஜனடி...//

ராஜன்! நீங்களும் எழுதுங்கள்

---செ.சுந்தரராஜன்

அன்புடன் அருணா on November 4, 2009 4:14 PM said...

:)

அமுதா கிருஷ்ணா on November 4, 2009 4:19 PM said...

ஓ திருநெல்வேலிக்காரர்களை பிடிக்காதா...ஆதி பதிவர் சந்திப்பில் பார்த்துக் கொள்ளலாம்...

நேசன்..., on November 4, 2009 4:24 PM said...

இந்த தொடர் பதிவு டெரர் பதிவா மாறப் போகுதுன்னு நினைக்கிறேன்!........

சஹானா beautiful raga on November 4, 2009 5:00 PM said...

இல்ல நான் அக்மார்க் சென்னை

SanjaiGandhi™ on November 4, 2009 5:15 PM said...

இறந்தவர்கள் பெயரை சொல்லக் கூடாதுன்னு பரிசல் நிபந்தனை விதிச்சாரே. சஞ்சய்காந்தி பிடிக்கலையா? வாழும் சஞ்சய்காந்தி இதுக்கு பழி வாங்குவான். :)

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் on November 4, 2009 5:19 PM said...

// SanjaiGandhi™ said...
இறந்தவர்கள் பெயரை சொல்லக் கூடாதுன்னு பரிசல் நிபந்தனை விதிச்சாரே. சஞ்சய்காந்தி பிடிக்கலையா? வாழும் சஞ்சய்காந்தி இதுக்கு பழி வாங்குவான். :)//

அப்போ அவர் சொன்ன சஞ்சய்காந்தி நீங்க இல்லையா?
:-[

SanjaiGandhi™ on November 4, 2009 5:25 PM said...

//அப்போ அவர் சொன்ன சஞ்சய்காந்தி நீங்க இல்லையா?
:-[ //

பிடிச்சவர்னு சொல்லி இருந்தா , அது நானா இல்லைனாலும் ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ஒட்டி இருப்போம்ல. பிடிக்காதவர்னு சொல்லி இருக்கிறதால நானா இருந்தாலும் இப்டி தான் சமாளிக்கனும்.. இதெல்லாம் தொழில் ரகசியல் அயயாச்சாமி.. :)
( இதுக்கெல்லாம் விஜய் தேவைப்படறார் )

விளையாட்டுக்குக் கூட அரசியல்வாதி என்று சொல்லும் நிலையில் எல்லாம் நான் இல்லைங்க. அதனால அவர் என்னை சொல்லி இருக்க மாட்டார்.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் on November 4, 2009 5:33 PM said...

//SanjaiGandhi™ said...
விளையாட்டுக்குக் கூட அரசியல்வாதி என்று சொல்லும் நிலையில் எல்லாம் நான் இல்லைங்க. //

அவ்ளோ நல்லவரா நீங்க?

Karthik on November 4, 2009 7:39 PM said...

//பிடித்தவர் : இப்போதைக்கு சுனைனா

enna kodumai karki...:)

அதிலை on November 4, 2009 7:45 PM said...

5.நடிகர்
பிடித்தவர் :விஜய்

பிடிக்காதவர்:அதே லிஸ்ட்டுதான்

நடிகர்னு சொல்லிட்டு டான்சர் பேர் ..... சரி ரைட்டு.. ஆனா அவர புடிச்சா இவர இப்படிங்க புடிக்காம போவுது? ... நம்ம லிஸ்டில் ரெண்டு பேரும் இல்லைங்கோ!

டம்பி மேவீ on November 4, 2009 8:54 PM said...

"பிடிக்காதவர்: ராதிகா ஆவ்வ்வ்"

enakku theriyume
ai enakku theriyume

கும்க்கி on November 4, 2009 9:29 PM said...

:---))))

கும்க்கி on November 4, 2009 9:30 PM said...

காரம் கம்மி.

Romeoboy on November 4, 2009 11:55 PM said...

விளையாட்டு நல்லாதான் போயிட்டு இருக்கு.

தாரணி பிரியா on November 5, 2009 12:01 AM said...

சரண், பரத்வாஜ், சமீரா ரெட்டி ஒ.கே ஒ.கே

பச்சிலை புடுங்கி on November 5, 2009 8:40 AM said...

இரும்புத்திரை அரவிந்த் said...
//ஊர் பாசமும்,ஜாதி பாசமும் ஒன்னு தான் சொன்ன கார்க்கி இவரு..

ஊரு பாசம் எல்லாம் காட்டக்கூடாது சொன்னீங்களே இதுல எப்படி ஊரு வந்தது//

கார்க்கி said...
//அரவிந்த், நான் சென்னைக்காரனே கிடையாது. மொத்தமே நாலு வருஷம்தான் சென்னைல இருந்திருப்பேன். எனக்கு சென்னைவாசிகளை புடிக்கும்ன்னு தான் சொன்னேன். ஆனான் நான் சென்னை கிடையாது.

ஹுசைனம்மா, எனக்கு எந்த பாசமும் இல்லை. என் கொள்கை, எந்த ஊருல குப்பை கொட்டற்மோ அதான் புடிக்கும். சென்னை வந்தும் நெல்லைதன வெயிட்டுன்னு எப்படி சொல்லலாம்? அப்ப நெல்லைல குப்பை கொட்டலாமே? இப்ப நான் சென்னையில் இருப்பதால் இந்த பதில்//

இது எப்படி இருக்கு தெரியுமா ? நான் பாப்பான் இல்ல ஆனா பாப்பான் ஜாதி பிடிக்கும்...................... தேவர் ஜாதி ஆளுங்க பாப்பான் ஜாதிகிட்ட வேலை செஞ்சாலும் எப்பவும் அவங்க சொந்த ஜாதி பெருமை பேசுறதால அவங்களை பிடிக்காதுன்னு சொல்ற மாதிரி இருக்கு...................

அப்பாடா பத்தவெச்சாச்சு..........................

பின்னூட்டத்துக்கு டிஸ்கி : இங்க குறிப்பிட்டிருக்க ஜாதியெல்லாம் உதாரணத்துக்கு சொன்னதுதான்..................... இதுக்கு மேலையும் தப்பா எடுத்துகிட்ட கம்பெனி பொறுப்பு கிடையாது............................

தத்துபித்து on November 5, 2009 10:03 AM said...
This post has been removed by the author.
தத்துபித்து on November 5, 2009 10:03 AM said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
ரைட்டு சகா.அப்ப நாந்தானா..


//(நினைச்சது மாதிரி ஏதோ விவாதம் போவுது போல தெரியுது. கொஞ்சம் ஜாக்கிரதை.. ஏன்னா பதிவர்களில் மெஜாரிட்டி திருநெல்வேலியாதான் இருப்பார்கள், மண்டையில் கொட்டி விட்டிருவாங்க..)
///
etho ennala mudinchathu.

//ஹுசைனம்மா, எனக்கு எந்த பாசமும் இல்லை. என் கொள்கை, எந்த ஊருல குப்பை கொட்டற்மோ அதான் புடிக்கும். சென்னை வந்தும் நெல்லைதன வெயிட்டுன்னு எப்படி சொல்லலாம்? அப்ப நெல்லைல குப்பை கொட்டலாமே? இப்ப நான் சென்னையில் இருப்பதால் இந்த பதில்
//
ஜெனோவா, நன்றி. ஆனா யோசிச்சு பாருங்க, நான் நெல்லையை புடிக்கலைன்னு சொல்வதையே நெல்லைக்காரர்களால் ஏத்துக்க முடியல. நம்ம சகான்னுதான் விடறீங்கலே தவிர ஒருவன் புடிக்கலைன்னு சொல்வதை ஏத்துக்க முடியல. என் ஊரை ஒருவன் புடிகக்லைன்னு சொன்னா, எனக்கும்தான்னு நான் சொல்லுவேன். உடனே நெல்லை நல்ல ஊருன்னு சொல்லாதிங்க. :)))
///

nellai nalla ooruthan enpathil enakku maatru karuthey illai.
melum thozhil valam kuraivaga irukkum karanathinaal than perumpalor chennaikkku selginranare thavira, pidithathinaal alla.
ungalakku pudikka villai enpathai etrru kollamal illai.athu ungal viruppam.karanam enna entru therinthu kolavathilthan aarvam.
.
pagirthalukku nanri.

MSKUMAR on November 6, 2009 9:05 AM said...

//ஊரு விட்டு வெளிய மக்கள் போனாலே, அது அவஙக்ள பொறுத்த வரைக்கும் வாழ தகுதியற்ற ஊரா போயிடுது.//
அப்படிஎன்றால் கார்க்கி, உங்கள் சொந்த ஊரும் வாழ தகுதி அற்ற ஊரா ? அங்கே வாழும் உங்கள் சொந்தங்கள் எல்லாம் வாழ வழியற்ற ஊரில் வாழும் அறிவிலிகளா ???

செந்தழல் ரவி on November 6, 2009 5:03 PM said...

http://software.nhm.in/node/14

இந்த வேலை வாய்ப்பையும் அடுத்து போடு சகா..Fresher வேலை வாய்ப்பு.

கடைக்குட்டி on November 6, 2009 10:56 PM said...

தல என்ன என் பேரு இருக்கு தொடர????


சரி செஞ்சுருவோம்... :-)

அத்திரி on November 7, 2009 2:29 PM said...

//பிடிக்காதவர்: திருநெல்வேலிகாரங்க//

மவனே பதிவர் சந்திப்புல என் கண் முன்னாடி வந்துராதே

அத்திரி on November 7, 2009 2:31 PM said...

//எனக்கு எந்த பாசமும் இல்லை. என் கொள்கை, எந்த ஊருல குப்பை கொட்டற்மோ அதான் புடிக்கும். சென்னை வந்தும் நெல்லைதன வெயிட்டுன்னு எப்படி சொல்லலாம்? அப்ப நெல்லைல குப்பை கொட்டலாமே? இப்ப நான் சென்னையில் இருப்பதால் இந்த பதில்//


சகா நெல்லையில் குப்பை கொட்ட இடம் இருந்தால் நாங்க ஏன் வேற இடத்துக்கு போறோம்.. சென்னையில் தான் எல்லாம் குப்பையும் இருக்கு................

அத்திரி on November 7, 2009 2:33 PM said...

ஊர்ப்பாசம் என்பது தாய் பாசத்திற்கு நிகரானது................

இப்படிக்கு
மும்ம்பையில் இரு வருடம் குப்பை கொட்டிவிட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னயில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும்..........

அப்பாவி நெல்லைவாசி

அத்திரி on November 7, 2009 2:34 PM said...

ஆதி அண்ணே இவனை என்ன பண்ணலாம்

நன்றி kelvi.net

Tamil Top Blogs

alexa rank

 

all rights reserved to www.karkibava.com